Tuesday, August 11, 2009

ராசவிழிகளின் பரிசீலனைக்கு...

ராசவசந்தத்திற்கு,

ஒரு ரகசிய வேண்டுகோள்.

பனியில் மலர்ந்த பாரிசாதமே.

உன்னிடம் எனக்குப் பேசவேண்டும் .

பூமியின் பார்வையில்

அண்டவெளிகளின் நட்சத்திரங்கள் போல

சற்று தள்ளிநின்றே...

உன்னிடம் எனக்கு நிறைய பேசவேண்டும்.

எனக்கு நீ பரிச்சயமானது

என்தங்கையின் அறிமுகத்திலல்ல...

தாவணி போர்த்திய தங்கநிலவே.

அதற்கு முன்பே

ஒரு வெங்கலச் சிரிப்பில்...

ஓ..நீ நடந்த பாதையை

என்னைத் திரும்பிப் பார்க்க வைத்த

அந்த

வாய் மணியோசை தான்

அன்றாடம் என்னை துயிலெழுப்பிக் கொண்டிருக்கிறது.

உனக்குத் தெரியுமோ?..தெரியாதோ

விளக்குகள் தான் இந்த நிழலைத் தேடி

வந்திருக்கின்றன...

நிழல் விளக்கைத் தேடுவது இதுவே முதல்முறை

காதல்

இந்த வார்த்தைக்கு அமானுசிய சக்தி இருப்பதாய்

எனக்கு நம்பிக்கை இல்லை

தோழி. நானறிவேன்

காதலே வாழ்க்கை அல்ல

குழந்தையில் விளையாட்டுக்கு துணை சேர்ப்பது போல்

இளமையில் வாழ்க்கைக்கு துணை சேர்க்கும்

ஒரு வசீகர விசாரிப்புதான்... காதல்

ஏற்கவோ, மறுக்கவோ

உரிமைகள் உனக்குத்தான்

காலகாலமாக கற்பனை செய்வதாலேயே

கடுகத்தனை இருந்த காதல்

உப்பி உப்பி பூதாகரமாய்...

ஒரு மாயை

காதலும், திருமணமும் கூட

என்னைப் பொருத்தவரை

நீண்டகால நட்பிற்கான ஒப்பந்தமே தவிர

பூச் சுற்றப்பட்ட பொன்விலங்கு அல்ல

கால காலமாய் கற்பிக்கப்பட்ட

புனிதக் காதல் நடைமுறையில்

இன்று வரை [ஒரு சில மட்டும் விதிவிலக்காய்]

நீ என்னை நேசிக்கிறாயா?

என்பது சாதாரண வார்த்தைகள் தான்

யோசித்துப்பார் ..நான்

இதற்கு ஏன் தயங்கித்தயங்கி

தலையைக்குனிந்து மனசை நிமிர்தவேண்டும்

மீண்டும் நினைவுறுத்துகிறேன்

நீ எனக்கு பரீச்சயமானது

என் தங்கையின் அறிமுகத்திலல்ல..

தாவணி போர்த்திய தங்க நிலாவே

அதற்கு முந்திய

ஒரு வெங்கலச் சிரிப்பில்...

ஒரு வகை உணவு

பிடிக்குமா? பிடிக்காதா?

என்பது போன்றது தானே

காதலிக்கிறாயா? இல்லையா? என்பதும்

ஒரு சாதாரண விருப்பு

அல்லது

நிராகரிப்பு
இதற்கேன் பொழுதுகள்

கற்பனையிலும் தயக்கத்திலும் கரைய வேண்டும்

பெண்ணே

இப்போது சொல் ..

நானுன்னை நேசிக்கலமா..? காதலியாய்;

ஒரு வசந்த விசாரிப்புதான்...

எற்பும் மறுபும் சாதாரணம் தான்

அதிலும் `எனக்கு சாதா ரணத்தைக்கூட

ஏற்படுத்தாத எதிர்பார்ப்பு.

நீ என்னை எப்படி நேசிக்கிறாய்

என் அன் பு ள்ளவே...

நீ சொல்வதால் என் சுவாசம் ஒன்றும் இளைப்பறிவிடாது

ஆனால் தோழி ஓர் அன்பு வேண்டுகோள்

உன் பதில் ஏற்போ? மறுப்போ?

மறுப்பாய் இருப்பினும் .....ஏற்பாய் இருப்பினும்

ஏற்பும் மறுப்பும் என்க்கு சாதாரணம்தான்

மீண்டும் மீண்டும் சந்திப்பொம்..... பேசுவோம்

காற்றுவெளிகளில் காலார நடப்போம்

கரங்கள் தட்டி கவிகள் பாடுவோம்

தோழி.....

நம் சுவாசங்கள் கூட சுகாதாரமானது

ஆதலினால்

மீண்டும் மீண்டும்

சந்திப்போம்.... பேசுவோம்...

காற்றுவெளிகளில் காலார நடப்போம்

கரங்கள்தட்டி கவிகள் பாடுவோம்

காதலர்களாய்..........

அல்லது நண்பர்களாய்..............

ஆம்

அல்லது நன்பர்களாய்......

ஏனெனில்

நம் சுவாசங்கள்கூட சுகாதாரமானது...



12/3/1989

Tuesday, August 4, 2009

இன்றைய இரவில்... கனவில்

வாழ்க்கை
ஒரு வித்தியாசமான போர்க்களம்
இதில் கத்திக்கும் இரத்தம் வரும்
பிரிவு வரும்போது.....

தோழியரே..!
நாம் மின்மினிகளாய்
இந்தக் கல்லூரிப்பெண்ணின் கையில்
துள்ளித்திரிந்த நாட்கள்
இன்னும் என் நெஞ்சில்
அச்சு மாறாத சோகராகங்களாய்....

பரந்த ஆலமரமாய் இந்தக் கல்லூரி
விழுதுகள் ஆசிரியர்கள்
நாம் அதன் கனிகள்
உதிர்கிறோம்...ம்ஹ்ம்
கனிகள்தானே!

தோழி!
பொழுது போக வேளைகளில்
பொய்க்கோபம்தானே
நம் விளையாட்டு..

பேசிய வார்த்தை
சிந்திய தண்ணீர்
விடுபட்ட அம்பு
துடிப்போடு வெளிப்பட்ட
துப்பாக்கி குண்டு
இவைகளைப்போல்
உறவுகளே..
நம் பழைய நிணைவுகள்
திரும்ப அரும்பாத வாசமலர்கள்

நேற்றே நமக்குத் தெரியும்
மலர்களே
நம் உறவுகள்
நிரந்தரமில்லா நிரந்தரங்கள்

நட்புப்பூவைச் சுற்றிச் சுற்றி
வண்டுகளய்
நாம் ரீங்கரித்த ராஜ ராகம்
இளவேனில் காற்றில்
இந்த ப்ரபஞ்சம் முழுதும்
வீசி வீசி முடிவில்
ஏன்
புயலாக ....நம்மிடமே
திரும்பியிருக்கிறது..

நட்பு நட்சத்திரங்களே,
நமக்கு வரும் விடியல்
நம்மை மறைத்தா
உதிக்கவேண்டும்..

பறித்த பின்னும்
வாசம்வரும்...மலர்
தாயின் ஏக்கத்தில்
வாடி உதிர்வது போல
நமக்குள் நாம் சருகுகளாய்
மருகி மருகி உதிர்கிறோம்..

மானுட அம்புகளே
ஏவும் வில்லைத் தெரிகிறது
இலக்கு எங்கே....?

கல்லூரி அம்பறாத்தூளி
காலமென்னும் வில்லோடு
இன்று சண்டை..
ச்சே...
பிரித்து எறிவதோ அம்புகளாய்
நம்மை................

நாம்
காலக் கர்ணனின் கைபட்டு
அறுந்த மேகலை.......ஆனால்
கோர்த்தெடுக்க தோழி
எந்தத் துரியோதனனும் இல்லை!

அழிவும் ஒன்றின் ஆரம்பம்
பிரிவு கூட அப்படித்தான்
என்ற நம்பிக்கையில்
இன்று நாம் சுமக்கிற
இந்த வாச நினைவுகள்
நாளைய சருகுகளைக்கூட
மலர்களாக்கும் சாகச பெட்டகங்கள்.

சுமப்பதற்கு சங்கடப்படாத
இந்த சுக நினைவுகளை
சுமந்து பிரிகிறோம்

தோழியரே
சந்திப்போம்.. பேசுவோம்
காற்றுவெளிகளில்
காலார நடப்போம்
கரங்கள் தட்டி கவிகள் பாடுவோம்
இமைப்போழுதும் பிரிந்திருக்காமல்
இருவிழிகளில் சோர்வில்லாமல்
அனிச்சமலர்களாய்
சோக சுவாசம் படாமல்
மீண்டும் மீண்டும்
சந்திப்போம்... பேசுவோம்
ஓடுவோம்... பாடுவோம்
தோழியரே
நாளைய பகலில் அல்ல..
அது நடக்காது..
இன்றைய இரவில்...............
.....................................கனவில்

10/3/1989

Sunday, August 2, 2009

பொல்லாத உலகம்....

ராஜ வசந்தமாய்
பூவே
நீ என் பார்வைத் தொட்டிலில்
விழும்போதெல்லாம்
உனக்கு தாலாட்டுப் பாடுவதே
தலையாய கடமையாய்
என் இமைகள்..

இலைச் சீப்புகளில் தலைவாரி
மலர்க்கண்ணாடியில் முகம் பார்த்து
நாணத்தோடு
நகர்ந்துவரும் தென்றலைப்போல்
உன் பாதங்கள்
கொலுசு நோகுமோ
பூமி நோகுமோ.. என்றபடி..

உன் புன்முறுவல் கண்டுதான்
சோம்பல் முறித்தான் சூரியன்

மா தவங்கள் கலைந்து
மயங்கச்சென்றது நிலவு.

மயக்கம் கலைந்து
எழுந்து வந்தது தாமரை

என்னது!..
நான் என்ன செய்கிறேனா?
இந்த நிகழ்வுகளை படமெடுக்க
என் பேனாவையும்,
கேமராவையும்
தேடியபடி.....

ஆராதனை யார்வேண்டுமானாலும்
செய்யலாம்.... மனமிருந்தால்
ஆலாபனை கூட
யார் வேண்டுமானாலும்
கேட்பதற்கு ஆளிருந்தால்..

பெண்ணே!
நான் கேள்விப்பட்டது உண்மையா?
உன்னைக்கண்டும் மலர்வதால்
சந்திரனுக்கும் அல்லிக்கும்
சங்கடமாமே....!

தயவு செய்து
நீ குள்க்கரைக்குப் போகவேண்டாம்!
உன்னை தடுக்கச் சொல்லி
நிலா
நட்சத்திரத் தொண்டர்களோடு
இரவு முழுதும் என்முன் மறியல்,

புல்லாங்குழல் குழந்தைகளின்
வேண்டுகோளுக்கிண்ங்கி
மூங்கில்கள் கூட அப்படித்தான்..

நீ பேசக்கூடதென்று
என்னிடம் பேரனி நடத்துகிறது

அட...!
நானென்ன வட்டாட்சி அலுவலரா?
இதென்ன?
என்னை நோக்கி பேரணியும்
ஊ................ர்வலமும்

பொல்லாத உலகம்.
3/3/1989

சந்தனமாய் சருகுகள்....

கனவுகளில்
வியர்க்கும்போது கூட
கவரி வீசிய காதலியே,

நீ
என்னை விட்டுப்போன
நாள் முதல்
என் நாட்குறிப்பேடு
வார்த்தைச்சோலை இல்லாமல்
பாலைவனமாய்....
வறண்டுபோய்..

அந்த நாள்முதல்
என் கனவுகள் அனைத்தும்
கனவுகளாகவே..

பெண்ணே!
உன்னைப் பூஜித்த பூக்கள் கூட
சருகாகாமல் மொட்டுக்களாய்......

நந்தவனமாய்
உன் பாதப்பூக்கள் மலர்ந்தபிறகு
உதித்தெழுந்த சூரியன்
அதன்பிறகு எப்போதும்
மேகங்களை வெறுத்து வெறுத்து
பூமி எங்கும் வெறுமையாய்....

உன் நகங்களின் வண்ணத்தில்
நயனங்களின் நர்த்தனத்தில்
பனியாய் கரைந்த
என் பொழுதுகள்

இத்தனைக்கும் ....
இத்தனைக்கும்
என்னவளே
நீதானே காரணம்.

உன் காது வளையங்கள் போல
என் சிந்தனைகள்
உன்னில் தொடங்கி
உன்னில் முடியும்
என் சிந்தனைகள் கூட
ஒரு வகையில் வளையங்களாய்

உன் சுவாசங்கள்
எனக்கு சொல்லிக்கொடுத்த
வாழ்க்கைத் தத்துவங்கள்
அத்தனையும்,
காலங்கள் பல கடந்தும்
ராஜ ராகம் பாடும்
வேனில் காலத்து குயில்களாய்
என்னில் பாடும் பூபாளம்....,

என் உணர்வுகள்கூட
இன்னும் இன்னும்
உன் நினைவுகளால்......
ஊமையாய்

மாறும் கோடைகாலம்
மாறும் குளிர்காலம்
மாறும் பனிக்காலம்
மாறும் இலையுதிர்காலம்
இத்தனைக்கும் மத்தியில்
உன் நினைவுகள்
மாறாத வேனில் காலமாய்
நிரந்தரமாய் துளிர்த்துக்கொண்டே...

அன்பே.........வா
நீ வாழும் வரைக்கும்
நாம் சந்தித்த மரத்தடியில்
சேரும் சருகளைப் பத்திரப்படுத்தி
அன்பே ....... எடுத்துவா

அவைதான் ....
சாகாமல் சாகும்
என் சரீரத்தை சாம்பலாக்கும்
சந்தனக்கட்டைகள்

ஆம்.. எனக்கு அந்த
சருகுகள்தான் சந்தனக்கட்டைகள்..


26 பிப் 1989

எங்கிருக்கிறாய் ?

என்னுள்

ஓர் உயிர் நதியை

ஓடவிட்ட நீ எங்கிருக்கிறாய்...


இதொ

கோடையும் வசந்தமுமாய்....

இரவும் பகலுமாய்

என் வசந்தமே

எங்கெ உன் சுவடுகளைக்கூடக்

காணவில்லை...


இதயப்படபடப்பில்

விசிறும் உன்

ஆடை விசிறிகளின்

அகங்கரக்காற்றை

நிராகரித்துவிட்டு

இமைவிசிறியில்

இளைப்பாறிய பொழுதுகள்


இன்ன்ம்கூட
எனுயிறைத் தாங்கிப்பிடிக்கிற
விழுதுகள்..


கற்பனையில்

சுகித்துக்கொண்டிருக்கிறேன் அன்பே

நீ என்னோடு இருப்பதாய்


சரியா........? தவறா.......?

தெரியவில்லை


பக்திக்கவசமணிந்து

கோவில் மேடையில் நாம் நடத்திய

பார்வை நாடகம்..

மணித்திரை அசைந்தும்

முடிய மறுத்த உறுதி

மடிந்து போனதின் மர்மம்

ம்ஹ்ம்....


உனக்கு மட்டுமாவது தெரியுமா?