Sunday, August 2, 2009

எங்கிருக்கிறாய் ?

என்னுள்

ஓர் உயிர் நதியை

ஓடவிட்ட நீ எங்கிருக்கிறாய்...


இதொ

கோடையும் வசந்தமுமாய்....

இரவும் பகலுமாய்

என் வசந்தமே

எங்கெ உன் சுவடுகளைக்கூடக்

காணவில்லை...


இதயப்படபடப்பில்

விசிறும் உன்

ஆடை விசிறிகளின்

அகங்கரக்காற்றை

நிராகரித்துவிட்டு

இமைவிசிறியில்

இளைப்பாறிய பொழுதுகள்


இன்ன்ம்கூட
எனுயிறைத் தாங்கிப்பிடிக்கிற
விழுதுகள்..


கற்பனையில்

சுகித்துக்கொண்டிருக்கிறேன் அன்பே

நீ என்னோடு இருப்பதாய்


சரியா........? தவறா.......?

தெரியவில்லை


பக்திக்கவசமணிந்து

கோவில் மேடையில் நாம் நடத்திய

பார்வை நாடகம்..

மணித்திரை அசைந்தும்

முடிய மறுத்த உறுதி

மடிந்து போனதின் மர்மம்

ம்ஹ்ம்....


உனக்கு மட்டுமாவது தெரியுமா?


No comments:

Post a Comment